அனுஷ்கா
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்டில் இருப்பதாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அனுஷ்காவும் மனம் திறந்து பேசியுள்ளார். தான் நடித்துள்ள நிசப்தம் பட விளம்பர நிகழ்ச்சியில் அனுஷ்கா கூறியதாவது, தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்பட்டது இல்லை என்றார்.
பட வாய்ப்பு
நான் எப்பொழுதுமே ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டான ஆள். அதனால் எனக்கு படுக்கைக்கு சென்று பட வாய்ப்பு பெறும் பிரச்சனை ஏற்படவில்லை. நான் ரொம்ப வெளிப்படையாக பேசும் ஆள். எளிய வழியில் சென்று குறைந்த நாட்கள் சினிமாவில் இருப்பதும், கடின வழியை தேர்வு செய்து பல காலம் தாக்குப்பிடிப்பதும் நம் கையில் தான் இருக்கிறது என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார்
அனுஷ்காவை போன்று தான் வரலட்சுமி சரத்குமாரும் முன்பு தெரிவித்திருந்தார். ஒரு நடிகரின் மகளாக இருந்துமே தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக வரு கூறினார். படுக்கைக்கு சென்று பட வாய்ப்பை பெறுவதை விட திறமைக்காக வரும் வாய்ப்பை ஏற்கவே விரும்புகிறேன். அவர்கள் கேட்பதற்கு முடியாது என்று கூறினால் கஷ்டப்பட்டு தான் மேலே வர வேண்டும். ஆனால் பரவாயில்லை என்று வரலட்சுமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகள்
இந்தியாவில் மீ டு இயக்கம் வேகம் எடுத்தபோது தங்களை படுக்கைக்கு அழைத்தவர்கள், பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து சில நடிகைகள் துணிச்சலாக பேசினார்கள். ஆனால் அப்படி பேசிய பிறகு அவர்களின் கெரியர் பாதிக்கப்பட்டது. அதை பார்த்த பிற நடிகைகள் வம்பு எதற்கு என்று அமைதியாகிவிட்டனர்.