ஆப்நகரம்

காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் முழு அறிக்கை இதோ!

நதிகள் உற்பத்தியாகும் இடத்தை விட அதிக சென்று சேரும் இடத்தைச் சார்ந்தவர்களுக்கு தான் உரிமை அதிகம் என உலக நிதி இருந்து வருகிறது.

TNN 12 Sep 2016, 10:18 am
நதிகள் உற்பத்தியாகும் இடத்தை விட அதிக சென்று சேரும் இடத்தைச் சார்ந்தவர்களுக்கு தான் உரிமை அதிகம் என உலக நிதி இருந்து வருகிறது. அப்படி இருந்தாலும், ’என் மாநிலத்தில் பாயும் நதி என்னுடையது’ என்ற மனநிலையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட ஆரம்பித்தபோது பழைய உலக நியதிகள் உடைக்கப்பட்டு பிரச்னைகள் உருவானது.
Samayam Tamil cauvery issue actors union association full statement
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் முழு அறிக்கை இதோ!


காவிரி நீர் பிரச்னையில் நீதிமன்றம், விஞ்ஞானிகள், காவிரி நீர் நடுவன் மன்றம் ஆகியவை பல வருடங்களாக விவாதித்து தீர்ப்புகளை அறிவித்த பின்னரும், அதை செயல்படுத்தாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவது முறையல்ல.

கர்நாடக மக்களின் விவசாயத்தையும், குடிநீர் தேவைகளையும் ஒதுக்கி விட்டு எங்களுக்கு தண்ணீர் கேட்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் இது தொடர்பாக நடந்த எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்ட கன்னட திரைப்பட திரையுலகை சார்ந்த பலரும் தங்களது உணர்வை பதிந்திருக்கிறார்கள். கலைஞர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும் மீறி கன்னட திரையுலகினர் தமிழ்நாடு முதல்வரின் உருவ பொம்மை எரித்ததை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அதே கூட்டத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும் தனது கருத்தை பதிவு செய்த சிவராஜ்குமாருக்கு தென்னிந்திர நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழக மக்களின் உரிமைக்காக தமிழ்நாடு முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்கு தமிழ் திரைப்படம் சார்ந்த அமைப்புகளுடன் அனைவரிடம் கலந்தாலோசித்து தென்னிந்திய நடிகர் சங்கம் திறம்பட செயல்படும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்