ஆப்நகரம்

காவிரி விவகாரம் - போராட்டத்தில் கலந்து கொள்ளாத முன்னணி நடிகைகள்!

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெறாத நிலையிலும், நேற்று நடைபெற்ற அறவழி போராட்டத்தில் முன்னணி நடிகைகள் பலரும் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

Samayam Tamil 9 Apr 2018, 2:57 pm
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெறாத நிலையிலும், நேற்று நடைபெற்ற அறவழி போராட்டத்தில் முன்னணி நடிகைகள் பலரும் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
Samayam Tamil actress


சினிமாத்துறையினர் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நேற்று அறவழி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், சத்யராஜ், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பலரும் பங்கேற்றனர். ஆனாலும் பல நடிகர்கள் கலந்துக்கோள்ளவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.


இது ஒருபுறம் இருக்க, இந்த போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஒருவர் கூட வரவில்லை. நடிகைகள் தன்ஷிகா, கஸ்தூரி, ரித்விகா, ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா உள்ளிட்ட மூத்த நடிகைகள் சிலருமே கலந்து கொண்டனர். முன்னணி நடிகைகள் பலரையும் வாழ வைத்து வரும் தமிழ் சினிமா துறை, தமிழக மக்களுக்காக நடத்தும் அறவழி போராட்டத்தில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்