ஆப்நகரம்

காவிரி இறுதி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த்!

காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Feb 2018, 7:59 pm
சென்னை: காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cauvery judgement makes disappointment says actor rajinikanth
காவிரி இறுதி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த்!


காவிரி நீர் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.

இதன்மூலம் ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.

காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். — Rajinikanth (@superstarrajini) February 16, 2018 தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும். மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Cauvery judgement makes disappointment says Actor Rajinikanth.

அடுத்த செய்தி

டிரெண்டிங்