ஆப்நகரம்

முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் - வைரமுத்து வெளியிட்ட ருசீகரம்

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த தகவலை ரசிகா்களுடன் பகிா்ந்து கொண்டா்ா.

Samayam Tamil 6 Sep 2018, 7:09 am
செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த தகவலை ரசிகா்களுடன் பகிா்ந்து கொண்டா்ா.
Samayam Tamil 23


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனா்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதன் கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் பாடல்களை பாடி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். இதனைத் தொடா்ந்து அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்டோா் படம் குறித்தும், படக் குழு குறித்தும் பேசினா்.

செக்கச்சிவந்த வானம் இசை வெளியீட்டு விழா
இதனைத் தொடா்ந்து கவிஞா் வைரமுத்து பேசுகையில், மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகள் ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது பம்பாய் படத்தில் இடம் பெற்ற “கண்ணாலனே” என்ற பாடல் தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவா்களால் ஏ.ஆா்.ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்து ரசித்து கேட்ட பாடல் என்று கூறினாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்