ஆப்நகரம்

எங்களுக்கு நீங்க வேணும் எஸ்.பி.பி.: மீண்டும் பிரார்த்தனையில் பிரபலங்கள்

மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 24 Sep 2020, 9:49 pm
கொரோனா வைரஸ் பிரச்சனையால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவருக்காக திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்தார்கள். அதன் பிறகு அவர் குணமடைந்தார்.
Samayam Tamil sp balasubrahmanyam


விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எஸ்.பி.பி.யின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டது. அதை பார்த்த திரையுலக பிரபலங்கள் எஸ்.பி.பி.க்காக மீண்டும் பிரார்த்தனை செய்யத் துவங்கிவிட்டார்கள்.

எஸ்.பி.பி. பற்றி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பதாவது,
நாம் அனைவரும் எஸ்.பி.பி. சாருக்காக பிரார்த்தனை செய்வோம். அவர் நிச்சயம் குணமாகிவிடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பாலு சார், எங்களுக்கு நீங்கள் வேண்டும்.

நீங்கள் இந்த உலகிற்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை அளித்துள்ளீர்கள். தயவு செய்து குணமாகி, திரும்பி வாங்க சார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டை வெறுப்பதாக ராதிகா சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி.பி.: ரசிகர்கள் கண்ணீருடன் பிரார்த்தனை

அடுத்த செய்தி

டிரெண்டிங்