சின்னத்திரை, பெரிய திரையில் அசத்தி வருகிறார் வனிதா விஜயகுமார். அவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக காளி வேடம் போட்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வனிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகை சேர்ந்தவர்களும் வனிதாவை பாராட்டியுள்ளனர். வனிதாவின் புகைப்படத்தை பார்த்த நடிகை அம்பிகா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
இந்த கெட்டப்பை பார்த்தபோது ரம்யா கிருஷ்ணன் நினைவு வந்தது. அம்மன் கெட்டப்பிற்கு பிறகு அவரின் இமேஜ் கிளாமர் நடிகையில் இருந்து வேற லெவலுக்கு சென்றது. அதன் பிறகு அவர் பல படங்களில் கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். அதே போன்று உங்களின் இமேஜும் மாறலாம். யார் கண்டது, இரண்டாம் பாகம் அல்லது மூன்றாக பாகம் இருந்தால் அதில் நீங்கள் நடிக்கலாம்...வாழ்த்துக்கள் என்றார்.
அதை பார்த்த வனிதா, அம்பிகாவுக்கு நன்றி தெரிவித்தார்.
வனிதாவை காளியாக பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டதாக நடிகை ரேகாவும் தெரிவித்துள்ளார். உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கட்டும் என்று வனிதாவை வாழ்த்தியிருக்கிறார் ரேகா.
வனிதா கையில் நான்கு படங்கள் இருக்கிறது. இந்நிலையில் காளி கெட்டப்பால் வனிதாவை விரைவில் பெரிய திரையில் கடவுள் கதாபாத்திரத்தில் பார்க்க அவரின் ஆதரவாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
காளி கெட்டப் தானாக அமைந்திருக்கிறது. இனி உங்களின் வாழ்க்கை வேற லெவலுக்கு போகப் போகிறது என்று வனிதாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பதாக வனிதா அறிவித்துள்ளார். அதற்கான காரணத்தை தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அவரின் விளக்கத்தை பார்த்தவர்கள், வனிதாவை சீண்டிய அந்த சீனியர் யார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக வனிதாவுக்கும், வட இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவருக்கும் திருமணமாகிவிட்டதாக தகவல் வெளியாகினது. கொல்கத்தாவில் தான் அவர்களின் திருமணம் நடந்தது என்று கூறப்பட்டது. அது குறித்து அறிந்த வனிதாவோ, தனக்கு திருமணமாகவில்லை என்றும், சிங்கிளாக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை பார்த்த வனிதா, அம்பிகாவுக்கு நன்றி தெரிவித்தார்.
வனிதாவை காளியாக பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டதாக நடிகை ரேகாவும் தெரிவித்துள்ளார். உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கட்டும் என்று வனிதாவை வாழ்த்தியிருக்கிறார் ரேகா.
வனிதா கையில் நான்கு படங்கள் இருக்கிறது. இந்நிலையில் காளி கெட்டப்பால் வனிதாவை விரைவில் பெரிய திரையில் கடவுள் கதாபாத்திரத்தில் பார்க்க அவரின் ஆதரவாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
காளி கெட்டப் தானாக அமைந்திருக்கிறது. இனி உங்களின் வாழ்க்கை வேற லெவலுக்கு போகப் போகிறது என்று வனிதாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக வனிதாவுக்கும், வட இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவருக்கும் திருமணமாகிவிட்டதாக தகவல் வெளியாகினது. கொல்கத்தாவில் தான் அவர்களின் திருமணம் நடந்தது என்று கூறப்பட்டது. அது குறித்து அறிந்த வனிதாவோ, தனக்கு திருமணமாகவில்லை என்றும், சிங்கிளாக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.