ஆப்நகரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19வது நினைவு தினம்! பிரபலங்களின் உருக்கமான ட்வீட்ஸ்

நடிப்பு என்றாலே சினிமாவில் முதலில் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான். அவரது நினைவு நாளில் பிரபலங்கள் பலரும் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Jul 2020, 1:47 pm
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு என்று தனி இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது 19 ஆவது நினைவு தினம் இன்று. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் தற்போதும் சினிமா ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நடிகர் திலகம் 2001ம் ஆம் ஆண்டு ஜூலை 21ம் தேதி 74 வயதில் காலமானார். அவரது மரணம் அப்போது இந்திய சினிமாத் துறை முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
Samayam Tamil Sivaji Ganesan


தமிழ் சினிமாவை சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என பிரித்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர். சிவாஜி கணேசன் தன்னுடைய நடிப்பின் மூலமாக பல கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர். அவர் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், பகத் சிங், ராஜராஜ சோழன் போன்ற எண்ணற்ற வரலாற்று படங்களில் அவர் அந்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். அந்த கதாபாத்திரங்களை நாம் நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவற்றை தத்ரூபமாக திரையில் தன்னுடைய நடிப்பால் கொண்டு வந்திருப்பார் சிவாஜி.

280க்கும் மேற்பட்ட படங்களில் தன்னிகரில்லா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவாஜி கணேசன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது பல்வேறு நடிகர்களின் கனவாகவும் இருந்தது. அவருடன் நடிப்பதை மிகப் பெரிய பெருமையாக கருதிய நடிகர்கள் பலர் உள்ளனர்.

இன்று சிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் ஹாஸ் டேக் உருவாக்கி அவரை பற்றி பதிவிட்டு வருகின்றனர். அவரது சாதனைகளை பேசும் வகையில் அதிகம் பேர் பதிவிட்டு வருகின்றனர்.

இன்று சிவாஜி கணேசனின் வீட்டில் அவரது புகைப்படத்திற்கு அவரது மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் புகைப்படமும் தற்போது வெளிவந்துள்ளது.

மேலும் சிவாஜி கணேசனை நினைவு கூறும் வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் அவரை பற்றி உருக்கமாக பேசி வருகின்றனர். சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு சிவாஜியின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துள்ளார்.


பிரபல கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பதிவிட்டுள்ள ட்விட்டில் "அவர் கடந்து சென்றாலும் நம் மனதில் அவரின் படங்கள் மற்றும் நடிப்பின் மூலம் என்றேண்டும் வாழ்கிறார் " என குறிப்பிட்டுள்ளார்.


பிரபல நடிகர் ஆர்கே சுரேஷ் பதிவிட்டுள்ள ட்விட்டில் "நடிப்பின் சிகரம் தொட்ட மாமேதை, தனித்துவத்திலும், திறமமையிலும், தன்னிகிரில்லா, பண்பாளர் திரைத் துறையின் பொக்கிஷமாக திகழ்ந்த.., நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை, அவரது நினைவு நாளில்..,நினைவு கூற என் கடமையுள்ளம் பெருமையடைகிறது" என குறிப்பிட்டுள்ளார்.


நடிகை குஷ்பூ பதிவிட்டுள்ள ட்விட்டில் இந்த நாளில் நடிகர் திலகத்தை நினைவு கூர்வதாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும் காமெடி நடிகர் விவேக் பதிவிட்டு உள்ள ட்விட்டில் "அழகிய தமிழும், முழங்கிய குரலும்,வழங்கிய நடிப்பும்..துலங்கிய முகமுமாய் நம்முடன் இன்றும் என்றும் வாழும் நடிகர் திலகத்தை...நினைவு கொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்