ஆப்நகரம்

இயக்குநரை கடுமையாக எச்சரித்த சென்சார் போர்டு

பகிரி படம் வெளியானால் உங்களது உயிருக்கு நிச்சியம் ஆபத்து இருக்கிறது என அப்பட இயக்குநரிடம் சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 7 Sep 2016, 7:22 pm
சென்னை: பகிரி படம் வெளியானால் உங்களது உயிருக்கு நிச்சியம் ஆபத்து இருக்கிறது என அப்பட இயக்குநரிடம் சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil censored board member warning director
இயக்குநரை கடுமையாக எச்சரித்த சென்சார் போர்டு


இதுகுறித்து பகிரி பட இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது :" என்னை எச்சரித்தது அதிகாரிகள் அல்ல.கீழ்மட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் தான் . 'இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்' என்று நேரடியாகவே அவர்கள் எச்சரித்தார்கள்.

இந்த படத்தின் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி அமைக்கபட்டிருந்தது. அதனை சென்சார் போர்டு உறுப்பினர்கள் நீக்கச் சொன்னார்கள். நான் மறுத்தேன். மதுபானக் கடை என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போலக் காட்டினார்கள். தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன்.
ஆனால் அதிகாரிகள் இதனை பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். பதினெட்டு வெட்டு அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள். அப்படி செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள்.
மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா? என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது. பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை விட்டுத் தர முடிவு செய்துவிட்டேன்'' என்றார்.

பகிரி படம் வரும் 16 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பகிரி படத்தில் நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் 'கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷ்ரவியா. இவர் ஆந்திர வரவு. திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்