ஆப்நகரம்

பைரஸி தொடர்பான விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது -மத்திய அரசு

பைரஸி தொடர்பான விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விரைந்து செயல்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2018, 11:29 am
பைரஸி தொடர்பானவிஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விரைந்து செயல்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil south


பல கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த திரைப்படத்தின் வசூலை நம்பித்தான் திரைத்துறையினரின் வருமானமே இருக்கிறது. ஆனால் பலரது கடின உழைப்பை சுரண்டுவதுபோல், திருட்டி வீசிடி, டீவிடி மூலம் அப்படங்கள் வெளியிடப்படுகின்றன. முன்பெல்லாம் திருட்டி வீசிடி வைத்திருப்பது மற்றும் அதை மறைமுகமாக விற்பதுதான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் தற்போது இணையதளத்தின் வளர்ச்சி அதிகமாதல், தமிழ் ராக்கர்ஸ் போல பல இணையதளங்கள், புதிய திரைப்படங்களை வெளியிடுகின்றன. இதனால்திரைதுறையினர் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பைரஸி தொடர்பாக முக்கிய நடவடிக்கையை சமீப காலமாக எடுத்துள்ளது. இதற்கு முன்பாகதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பகிர்ந்து கொண்ட தகவல் ‘கிட்டதட்ட 60 சதவீதத்திற்கும் மேற்பட்டஇணையதளங்கள்முடக்கப்பட்டுள்ளன. மேலும் திரைப்படங்களைஇணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக 69 வழக்குளை தொடர்ந்துள்ளது. மேலும் 18 திரையரங்கங்கள் மீது பைரஸி தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பைரஸி தொடர்பான விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விரைந்து செயல்படுவதாக மத்திய அரசு தெரிவிதுள்ளது. எனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை அழைத்து அவர்களை வாழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்