நடிகை சாந்தினி ஒரு நாளில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.
தற்போது நடிகை சாந்தினி தமிழில் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இதில் எல்லா படங்களிலுமே அவர் ஹீரோயினி வேடம் போடவில்லை. சில படங்களில் ஹீரோயினியாக நடிக்கிறார்.. மேலும் சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.
தன்னை தேடிவரும் எந்த வாய்ப்பையும் விடாமல் நடித்து வருகிறார். அதனால், ஒரே நாளில் இரண்டு கம்பெனிகள் தன்னிடம் கால்சீட் கேட்டால் கொடுத்து விடுகிறார். சரியான நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்து நடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தின் ஸ்பாட்டுக்கு செல்கிறாராம் சாந்தினி.
தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் சாந்தினி. ‘வண்டி’ படத்தில் நடித்து வந்த அதேநாளில் அவர்களும் கால்சீட் கேட்டதால், ஒரு படத்தில் மதியம் வரை நடித்து விட்டு, ‘வணங்காமுடி’ படத்துக்கு மதியம் 3 மணி நேரம் கால்சீட் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அவரது பிஸியான பணியை தெரிந்து கொண்டு தயாரிப்பாளர்களும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.
தற்போது நடிகை சாந்தினி தமிழில் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இதில் எல்லா படங்களிலுமே அவர் ஹீரோயினி வேடம் போடவில்லை. சில படங்களில் ஹீரோயினியாக நடிக்கிறார்.. மேலும் சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.
தன்னை தேடிவரும் எந்த வாய்ப்பையும் விடாமல் நடித்து வருகிறார். அதனால், ஒரே நாளில் இரண்டு கம்பெனிகள் தன்னிடம் கால்சீட் கேட்டால் கொடுத்து விடுகிறார். சரியான நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்து நடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தின் ஸ்பாட்டுக்கு செல்கிறாராம் சாந்தினி.
தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் சாந்தினி. ‘வண்டி’ படத்தில் நடித்து வந்த அதேநாளில் அவர்களும் கால்சீட் கேட்டதால், ஒரு படத்தில் மதியம் வரை நடித்து விட்டு, ‘வணங்காமுடி’ படத்துக்கு மதியம் 3 மணி நேரம் கால்சீட் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அவரது பிஸியான பணியை தெரிந்து கொண்டு தயாரிப்பாளர்களும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.