ஆப்நகரம்

”காதல் எனக்கு வராது அதை நான் வெறுக்கிறேன்”- சிம்பு பட நாயகி ஓபன் டாக்

கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிரபல நடிகை சார்மி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2018, 11:19 am
கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிரபல நடிகை சார்மி வெளிப்படையாக பேசியுள்ளார்.
Samayam Tamil charmi says no to marriage
காதல், திருமணத்தை வெறுக்கும் சார்மி- இதுதான் காரணம்


தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு உடன் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், சார்மி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

பல ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் இவர் தற்போது பிரபல தெலுங்கு பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிப்பு கம்பெனி தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

இதனால் இவர்கள் இருவருக்குமிடையில் காதல் என்று பல செய்திகள் டோலிவுட்டில் உலா வருகின்றன. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள சார்மி, தனிமையில் வாழ்வதை விரும்புவதாகவும் அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “என்னை வீட்டில் பையன் மாறி வளர்த்தனர், அதனால் நான் சுதந்திரமானவள். இயற்கையாகவே நான் துணிச்சல் நிறைந்த பெண். தனிமையில் வாழ்வதை விரும்புகிறேன். திருமணம், காதை ஆகியவற்றை வெறுக்கிறேன்” என்று சார்மி கூறியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பில் ஆர்வமுள்ளதால், பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருவதாக கூறும் சார்மி, தன்னை பற்றி மற்றவர்கள் நினைக்கும் கருத்துகளுக்கு பதில் கூற முடியாது. வாழ வாழவிடு என்பது தான் தன் சித்தாந்தம் என்றும் அவர் தெரிவித்தார்.

பணம் தான் இன்றைய வாழ்க்கையில் பாதுகாப்பு. இன்றைய மனித தேவைகளுக்கு பணம் தான் பிரதானமாக தேவைப்படுகிறது. கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ முடியாது என்பதால் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. எனது முடிவை பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு சார்மி கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்