ஆப்நகரம்

மணிரத்னத்தை வெல்வாரா பா.ரஞ்சித்; களத்தில் முதல்முறையாக மோதல்!

மணிரத்னம், பா.ரஞ்சித் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது.

Samayam Tamil 3 Sep 2018, 12:11 am
சென்னை: மணிரத்னம், பா.ரஞ்சித் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது.
Samayam Tamil Ranjith


பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் மாரி செல்வராஜ்.

இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை எழுதி இலக்கிய உலகில் புகழ் பெற்றவர். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கறுப்பி என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

இப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்று, இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இதேநாளில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற படமும் வெளியாகிறது.

இதில் அர்விந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன்மூலம் முதல் முறையாக மணிரத்னத்துடன், பா.ரஞ்சித் திரைக் களத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chekka Chivantha Vaanam, Pariyerum Perumal movies will be released on the same day.

அடுத்த செய்தி

டிரெண்டிங்