ஆப்நகரம்

நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் கைது!

சினிமாவில் நாயகியாக நடிக்கணும்னா என்கூட நீ படுக்கணும் என்று பிரபல நடிகை ஜானே கட்டாரியாவிடம் விளம்பர நடிகர் ரூபேஷ்குமார் கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Apr 2019, 1:31 pm
பாலியலால் பாதிக்கப்பட்ட சினிமா நடிகைகள் அண்மைகாலமாக மீ டூவில் ல் புகார் அளித்து வருகிறார்கள். இதில் திரையுலகை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலரும் சிக்குகிறார்கள்.இந்த சம்பவம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil jane-katariya


அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்திருப்பவர் ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய ஜானே கட்டாரியா. தற்போது இவர் சென்னையில் எம்.ஆர்.சி நகரில் ஓட்டலில் தங்கி சினிமா வாய்ப்பை தேடி வருகிறார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் ஜானே. அவருக்கு சமூக வலைதளம் மூலமாக சென்னை மாதவரத்தை சேர்ந்த பிரபல லுங்கி விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் தொடர்பு கொண்டுள்ளார்.

அவரை விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பின் விளம்பர படங்களில் நடிக்க வைக்க தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என ரூபேஷ் கூற ஜானே அதை மறுத்துள்ளார்.

இதனால் அவன் நடிகையின் புகைப்படங்களை மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி இணையதளத்தில் வெளியிட போவதாக மிரட்ட ஜானே சென்னை போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் விசாரணை மேற்கொண்ட போலிசார் ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்