ஆப்நகரம்

2வது திருமண சர்ச்சை: பாடகர் மீது அவதூறு வழக்கு தொடரும் அமலா பால்

மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர அமலா பாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 4 Nov 2020, 1:00 pm
கோலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் அமலா பால். தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் தன்னை தாய் போன்று பார்த்துக் கொள்வதாகவும் கூறினார் அமலா பால். ஆனால் அந்த நபர் யார் என்பதை தெரிவிக்க மறுத்தார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் அமலா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.
Samayam Tamil amala paul


மேலும் தானும், அமலா பாலும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அதை பார்த்தவர்களோ, அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது என்று பேசத் துவங்கினார்கள். ஆனால் தனக்கும், பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடக்கவில்லை என்றும், அந்த புகைப்படங்கள் வேலைக்கான போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்டவை என்றும் அமலா பால் விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு பவ்னிந்தர் சிங் அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டார். இதையடுத்து தன்னை பற்றி தவறான தகவலை பரப்பிய பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி அமலா பால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

தன் மனுவில் அமலா பால் கூறியிருந்ததாவது,

எனக்கும், பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்ததாகக் கூறி அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. என்னை பற்றி பிறர் தவறாக பேச வழி வகுத்தது. எனவே, பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அமலா பாலின் மனு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சதீஷ் குமார், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக அமலா பால் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வம்பில் சிக்கிய சிம்பு: காரணம் 'அந்த வீடியோ'

அடுத்த செய்தி

டிரெண்டிங்