ஆப்நகரம்

நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு..!

​ நடிகர் தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

TNN 24 Feb 2017, 10:32 pm
நடிகர் தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai hc ordered dhanush to appear directly
நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு..!


மதுரை மாவட்டம் மேலூரைச் சேந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்,நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மேலும் தங்கள் பராமரிப்பு செலவுக்காக தங்கள் மகன் தனுஷ் மாதம் 65,000 ரூபாய் பணம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

மேலூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ,மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் மனு செய்திருந்தார்.மேலும் தான் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்ததாகவும்,கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் கூறுவது பொய் எனவும் தனுஷ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிச் சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு அந்த தம்பதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் அவர்கள் சான்றிதழ்களின் பிரதிகளை தாக்கல் செய்திருந்தனர்.ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம்,உண்மையான சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

மேலும் சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்களை சரிபார்ப்பதற்காக,நடிகர் தனுஷ் வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai HC ordered Dhanush to appear directly

அடுத்த செய்தி

டிரெண்டிங்