ஆப்நகரம்

பெரும் பொருட்செலவில் தயாரான ரஜினி, அஜித் படங்கள்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்!

சென்னை: விரைவில் வெளியாகவுள்ள மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு தொடர்பாக தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2018, 1:13 pm
தமிழ்நாடு திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக, கடந்த ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி,
Samayam Tamil Rajini Ajith


* மல்டிபிளக்ஸ் திரையரங்கு - ரூ.50 முதல் ரூ.150

* மாநகராட்சி & நகராட்சி - ரூ.40 முதல் ரூ.100

* ஏசி இல்லாத திரையரங்கு - ரூ.80

* கிராமப்புற ஏசி திரையரங்கு - ரூ.75

* ஏசி இல்லாத திரையரங்கு - ரூ.50

என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் எந்தவொரு திரையரங்கும் இதைக் கடைபிடிக்க வில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னையைச் சேர்ந்த தேவராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்தின் 2.0, பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. இப்படங்கள் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே அதிக கட்டணம் வசூலிக்கவும், கூடுதல் காட்சிகள் திரையிடவும் வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, அரசின் உத்தரவை பின்பற்றாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஓராண்டிற்கு முன் பிறப்பித்த அரசாணையை ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை. திரையரங்குகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டதா?

அதன் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர். வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்