ஆப்நகரம்

8 நடிகர்கள் மீதான பிடிவாரண்டிற்கு இடைக்காலத் தடை..!

பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 8 நடிகர்களுக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்டிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

TNN 25 May 2017, 6:57 pm
பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 8 நடிகர்களுக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்டிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
Samayam Tamil chennai hc stayed the arrested warrant of 8 tamil film actors
8 நடிகர்கள் மீதான பிடிவாரண்டிற்கு இடைக்காலத் தடை..!


கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஷ்வரி விபச்சார வழக்கில் கைதான பின்னர் விபச்சாரத்தில் ஈடுபட்ட மற்ற நடிகைகள் குறித்து அவர் வாக்குமூலம் அளித்ததாக சில பத்திரிகைகள் அந்த நடிகைகளின் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டன.

இதனால் கோபமடைந்த திரைத்துறையினர் ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்டதாக சம்மந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா, சத்யராஜ் உட்பட 8 நடிகர்கள் மீது நீலகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரிபோரியோ என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக, சம்மந்தப்பட்ட 8 நடிகர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போது இடைக்காலத்தடை வாங்கினர். அந்த இடைக்கால தடை கடந்த மாதத்துடன் காலாவதியானது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் அவர்களை கைது செய்யலாம் என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தங்கள் மீதான பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி, 8 நடிகர்களும் நீலகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். ஆனால் இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இதனால் 8 நடிகர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதே நேரத்தில் பிடிவாரண்டிற்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடிகர்கள் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிடிவாரண்டிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த 8 நடிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Chennai Hc stayed the arrested warrant of 8 Tamil film actors

அடுத்த செய்தி

டிரெண்டிங்