ஆப்நகரம்

தத்தளிக்கிறது சென்னை: விஜய் கொடுத்த விருந்தால் சர்ச்சை!!

சென்னையில் தனது வீட்டில் மெர்சல் படகுழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்து இருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

TOI Contributor 4 Nov 2017, 4:32 pm
சென்னையில் தனது வீட்டில் மெர்சல் படகுழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்து இருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
Samayam Tamil chennai rains vs vijay party vijay gave party to mersal team at his home
தத்தளிக்கிறது சென்னை: விஜய் கொடுத்த விருந்தால் சர்ச்சை!!


அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளியன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது.

ரூ.120 கோடியில் தயாரான இந்தப் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால், இந்த செய்தியை திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான அபிராமி ராமநாதன் மறுத்துள்ளார். தெலுங்கில் இந்தப் படம் வரும் 7ஆம் தேதி வெளியாகிறது.

இந்த வெற்றியை கொண்டாட படக்குழுவினரை தனது வீட்டுக்கு அழைத்து இருந்தார். நாயகிகளுக்கு அழைப்பு இல்லை. ஏ.ஆர்.ரகுமானும், இயக்குனர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் படக்குழுவினருக்கு விஜய் விலை உயர்ந்த பரிசை அளித்ததாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சி வருகின்றனர். இந்த நிலையில் படக்குழுவினருக்கு விஜய் விருந்து அளித்து இருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Chennai Rains vs Vijay party: Vijay gave party to Mersal team at his home

அடுத்த செய்தி

டிரெண்டிங்