ஆப்நகரம்

பொங்கலுக்குப் பிறகு மூடுவிழா கொண்டாடும் அபிராமி மெகா மால்!

தற்போது திரையரங்காக செயல்பட்டு வரும் அபிராமி மால், பொங்கலுக்குப் பிறகு அடுக்குமாடி குடியிருப்பாக மாறுகிறது.

Samayam Tamil 31 Dec 2018, 6:11 pm
பொங்கலுக்கு பின்னர் அபிராமி மெகா மால் திரையரங்கம் மூடப்படவுள்ளது. பொங்கல் வெளியீடாக அபிராமி மெகா மாலில் கடைசியாக ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கான முன்பதிவு தற்போது சென்று கொண்டிருக்கிறது.
Samayam Tamil abirami-mega-mall


இந்நிலையில் சென்னையின் மிக முக்கியமான திரையரங்கம் அபிராமி மெகா மால். இந்நிறுவனத்தினர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிதகவலை கூறியுள்ளனர். பொங்கலுக்கு வரும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ தங்கள் மாலில் திரையிடப்படும் கடைசி படங்களாம்.

அதன் பிறகு அந்த மால் இடத்தில் 14 மாடிகளில் குடியிருப்புக்கள் அமைக்கப்படவுள்ளதால் திரையரங்குகள் மூடப்படுகிறதாம். விரைவிலேயே உலகத்தரம் வாய்ந்த திரையரங்குகள் இதே இடத்தில் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்