ஆப்நகரம்

‘சென்னையில் ஒரு மழைக்காலம்’தான் பின்னர் ‘வாரணம் ஆயிரம்’ படமாக மாறியது!

சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்கு முதல் வைத்த பெயர் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’.

Samayam Tamil 25 Feb 2019, 4:11 pm
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, ரம்யா, சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் 2008ல் வெளியான படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் அடித்த படம். இந்தப் படம்தான் சூர்யாவின் மார்க்கெட்டை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. மேலும் இதன் மூலம் ஏராளமான பெண் ரசிகர்கள் சூர்யாவுக்கு கிடைத்தன.
Samayam Tamil varanma-airam


இந்நிலையில் இந்தப் படத்தை முதலில் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்ற பெயரில்தான் கௌதம் மேனன் இயக்கி வந்தார். இந்தப் படத்தில் முதலில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின்தான் நடித்தார். ஒரு சில காரணங்களால் நடிகை அசின் அந்த படத்திலிருந்து விலக, பிறகு சமீரா ரெட்டி நடிக்க வந்தார். ‘கஜினி’ படத்துக்குப் பிறகு இந்த படத்திலும் இந்த ஜோடி இணைந்தது. ஆனால் அது மிஸ்ஸாகி விட்டது.

அதை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா & -கௌதம் மேனன் மீண்டும் விரைவில் இணையவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்