ஆப்நகரம்

‘சென்னையில் ஒரு நாள் 2’படத்துக்கு தியேட்டரில் ஒருநாள் கூட இடமில்லை

அறிவித்த தேதியில் தியேட்டர்கள் கிடைக்காததால் சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒரு நாள் 2’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தெரிகிறது.

TNN 11 Sep 2017, 5:30 pm
அறிவித்த தேதியில் தியேட்டர்கள் கிடைக்காததால் சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒரு நாள் 2’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தெரிகிறது.
Samayam Tamil chennaiyil oru naal 2 movie release date postponed
‘சென்னையில் ஒரு நாள் 2’படத்துக்கு தியேட்டரில் ஒருநாள் கூட இடமில்லை


மலையாளத்தில் வெளியான ‘டிராபிக்’ என்ற படம் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் ரீமேக்காகி வெளியானது. இந்தப் படத்தை தமிழில் ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தயாரித்தது. இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் சரத்குமார் நடித்துள்ளார். அவருடன் அஜய், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், அஞ்சனா பிரேம் நடித்துள்ளனர். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தை புதுமுக இயக்குனர் ஜேபியார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரித்துள்ளார்.

.இந்தப் படம் வருகிற 15ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இதன் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளது. அதற்கு காரணம் விஷாலின் ‘துப்பறிவாளன்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’, ‘களத்தூர் கிராமம்’, ‘யார் இவன்’ ஆகிய படங்கள் 15ம் தேதி வெளியாகிறது.

இதில் ‘துப்பறிவாளன்’ சுமார் 500 தியேட்டர்களில் வெளிவருகிறது, ‘மகளிர் மட்டும்’ 300 தியேட்டர்களில் வெளிவருகிறது. இதனால் சரத்குமாரின் ‘சென்னையில் ஒரு நாள்2’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்