ஆப்நகரம்

ரஜினி செய்த 'அந்த' காரியத்தை மறக்கத் தான் முடியுமா?: சேரன்

ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த காரியத்தை தன்னால் என்றுமே மறக்க முடியாது என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Oct 2019, 2:52 pm
முரளி, மீனா, சங்கவி உள்ளிட்டோரை வைத்து சேரன் இயக்கிய பொற்காலம் படம் ரிலீஸாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி ரசிகர்கள் சேரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil cheran




படம் பற்றி சேரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

1997... அக்டோபர் மாதம் 30ம் தேதி வெளியானது..
இன்றும் அந்த படம் பற்றிய நினைவுகள்..
இன்னும் என்னுள் வாழும் மாணிக்கம், மரகதம், பஞ்சவர்ணம், ராசுவேளார்....
ஒளிபதிவாளர் ப்ரியன் அவர்களும் முரளி சார் மணிவண்ணன் சார் மூவருமே இப்போது இல்லை..
அவர்களின் உழைப்பும் கதாபாத்திரங்களும் வாழ்கிறது..
கலைக்கு மட்டுமே காலம் கடந்து வாழும் சக்தி இருக்கிறது...
முதன்முதலாக குயவர்களுக்கான கலையான மண்பாண்டம் செய்யும் தொழிலை திரைக்கு அறிமுகம் ஆக்கிய படம்.
தொடர்ந்து 40 நாட்கள் அடைமழையிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி
100 நாட்களை கடந்த படம்..
நல்ல படைப்பு என இதுவரை கொண்டாடிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி... என்று தெரிவித்துள்ளார்.

பொற்காலம் படத்தை பாராட்டி ரஜினி தனக்கு தங்கச் சங்கிலியை பரிசாக அளித்ததை தன்னால் மறக்கவே முடியாது என்று சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,



மறக்க முடியாத நிகழ்வு..
சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னை அவரது அருணாச்சலம் பட விழாவில் அழைத்து தங்க சங்கிலி பரிசாக அளித்தார்.. அன்றிலிருந்து இன்றுவரை என்மேல் பாசம் காட்டும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்... என்றார்.

மீரா மிதுனுடன் இம்புட்டு நெருக்கமா, ஜாக்கிரதை: சரவணனுக்கு நெட்டிசன்ஸ் எச்சரிக்கை

தான் 1997ம் செய்ததை 2கே கிட்ஸ் கூட புரிந்து கொண்டதை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார் சேரன். குடும்பப் பாங்கான படங்களை அழகாக எடுப்பதற்கு பெயர் போனவர் சேரன். அதனாலேயே அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம் கூட இன்றளவும் பேசப்படுகிறது.

சேட்டை...அட்லி தான் தெளிவா சொல்லிட்டாரே, அப்புறம் என்ன?

சேரனின் சில படங்களை அதுவே எங்களை விட்டுவிடுங்க என்று கதறும் அளவுக்கு பல முறை பார்த்த ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்