ஆப்நகரம்

நலம் விசாரிக்க சென்ற சேரன்... தலை வாழை இலையில் விருந்து வைத்து அசத்திய மதுமிதா!

சேரன் நேற்று மதுமிதாவிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

Samayam Tamil 25 Oct 2019, 9:06 am
பிக் பாஸ் 3வது சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் முக்கியமான ஒன்று மதுமிதாவின் வெளியேற்றம். ஹலோ டாஸ்கில் காவேரி குறித்து மதுமிதா பேசியதால் ஷெரின் அதை கடுமையாகத் தட்டி கேட்டுள்ளார். ஷெரிடன் இணைந்து மற்ற போட்டியாளர்களும், தரக்குறைவாகப் பேசியதால் மதுமிதா தற்கொலைக்கு முயன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
Samayam Tamil EHkixrXU8AA66hk


பிறகு சேரன் மற்றும் கஸ்தூரியைத் தவிர வீட்டில் இருந்த 8 பேர் மீதும் வழக்கு தொடரப் போவதாக மதுமிதா கூறினார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் மதுமிதாவை யாரும் நேரில் சென்று சந்திக்காமல் இருந்தனர்.

Varalaxmi Sarathkumar: பிகிலை பார்த்து வீடியோ எடுத்து வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்!

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சேரனிடம், மதுமிதாவை சென்று சந்திப்பீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சேரன், நிச்சயம் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதுமிதாவை, இயக்குநர் சேரன் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது அங்கு சேரனுக்கு வாழையிலையில் அசைவ உணவு விருந்தளிக்கப்பட்டது. இது குறித்து சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களைத் துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்.உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வைத் தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்.' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைக் கண்ட மதுமிதா ரசிகர்கள் சேரனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்