ஆப்நகரம்

பெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன்: சர்ச்சையில், அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Apr 2019, 1:48 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sivaka


கடந்த 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றாக வைக்கப்பட்டது. இதில், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் தங்களது ஜனநாயகக் கடமையான ஆற்றினர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதே போன்று நடிகர் சிவகார்த்திகேயனும் 17ம் தேதி, நாளை அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்…இது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட என்று பதிவிட்டிருந்தார்.

இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்: கோவையில் இன்னிசை நிகழ்ச்சி!

ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்: முதல் முறையாக போட்டோ வெளியிட்ட ப்ரஜின் – சாண்ட்ரா ஜோடி!
இந்த நிலையில், தான், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஷெப்பர்ட் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்ற போது அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதன் காரணமாக சிறிது நேரம் அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அவருடன் வந்த அவரது மனைவி ஆர்த்தி வாக்களித்தார்.

Director Siva: முதல் முறையாக அஜித்தின் மாஸான இயக்குனர் சிவாவுடன் இணைந்த சூர்யா!

பேய் படங்களில் ராகவா லாரன்ஸ் தான் கில்லாடிக்கு கில்லாடி!

டாட்டா காட்டும் ரஜினிகாந்த்: வைரலாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!


இதையடுத்து, பல மணிநேரம் அதிகாரிகளுடன் பேசிய பின்னர், அவருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கினர். வாக்களித்த பின்னர், சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கத்தில், வாக்குரிமை என்பது உங்களது உரிமை. அதற்காக போராடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

ஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அதர்வா: ஏய் டி ராசாத்தி பாடல் லிரிக் வீடியோ!


இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்