ஆப்நகரம்

இசைஞானி பாடலை பாடி அசத்தும் சீன இளைஞர்..!

சீன மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இளைஞர் ஒருவர்,இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அச்சுபிசகாமல் பாடி அசத்தியுள்ளார்.

TNN 8 Sep 2016, 11:23 am
சீன மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இளைஞர் ஒருவர்,இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அச்சுபிசகாமல் பாடி அசத்தியுள்ளார்.
Samayam Tamil chinese guy sung ilayarajas song
இசைஞானி பாடலை பாடி அசத்தும் சீன இளைஞர்..!


இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் இந்தியாவில் இல்லை எனலாம்.அந்த அளவிற்கு இசை உலகிற்கு பல அற்புதமான பாடல்களை இசைஞானி அளித்துள்ளார்.இந்தியாவில் அனைவராலும் பாராட்டுப்பட்ட வந்த அவரது பாடல்கள்,தற்போது கடல் கடந்தும் புகழ் பெற்று வருகின்றன என்பதற்கு க்யூ மி என்ற சீனா இளைஞரே உதாரணம்.

சீனாவில் பிறந்து,வளர்ந்து தற்போது அமெரிக்காவின் சியாட்டில் நகரில் மென்பொருள் பொறியியல் வல்லுநராக பணியாற்றி வரும் க்யூ மி,இளையராஜாவின் தீவிர ரசிகர்.தாய்மொழி சீனமாக இருந்தாலும்,இளையராஜா மீது கொண்ட பற்றால்,அவருடைய பாடலை மிக அழகாக பாடுகிறார்.இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்றான ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ பாடலை க்யூ மி எவ்வளவு அழகாக பாடுகிறார் என்பதை பாருங்கள்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்