புதுதில்லி: அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய சல்மான் கானின் விடுதலையை மறு பரிசீலனை செய்து, அவரை சரணடைய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் இது தொடர்பாக நடிகர் சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Chinkara case: SC also issues a notice to Salman Khan on Rajasthan Govt's plea — ANI (@ANI_news) November 11, 2016 ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த 'ஹம் சாத் சாத் ஹைன்' படத்தின் படப்பிடிப்பின் போது கண்காணி கிராம வனப்பகுதியருகே அரியவகை மான்களான கலைமான் மற்றும் சின்காரா ஆகிய 2 மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் உட்பட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த விசாரணையின் போது, சல்மான் கான் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் காலம் முடிவடைந்து, அவர் சட்ட விரோதமாக ஆயுதம் பயன்படுத்தியாக ஜோத்பூர் போலீசார் சல்மான் கான் மீது ஆயுத சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக இவ்வழக்கில் கீழ்நீதிமன்றம், சல்மானை குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இது தொடர்பாக சல்மான் கான் தரப்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சல்மான் கானை விடுவித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய சல்மான் கானின் விடுதலையை மறு பரிசீலனை செய்து, அவரை சரணடைய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் இது தொடர்பாக நடிகர் சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Chinkara case: SC also issues a notice to Salman Khan on Rajasthan Govt's plea — ANI (@ANI_news) November 11, 2016 ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த 'ஹம் சாத் சாத் ஹைன்' படத்தின் படப்பிடிப்பின் போது கண்காணி கிராம வனப்பகுதியருகே அரியவகை மான்களான கலைமான் மற்றும் சின்காரா ஆகிய 2 மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் உட்பட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த விசாரணையின் போது, சல்மான் கான் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் காலம் முடிவடைந்து, அவர் சட்ட விரோதமாக ஆயுதம் பயன்படுத்தியாக ஜோத்பூர் போலீசார் சல்மான் கான் மீது ஆயுத சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக இவ்வழக்கில் கீழ்நீதிமன்றம், சல்மானை குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இது தொடர்பாக சல்மான் கான் தரப்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சல்மான் கானை விடுவித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.