ஆப்நகரம்

Chinmayi: ராதாரவிக்கு ’டத்தோ’ பட்டம் வழங்கப்படவில்லை- சின்மயி மீண்டும் சர்ச்சை

ராதாரவிக்கு டத்தோ விருது வழங்கப்படவில்லை என சின்மயின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Dec 2018, 1:09 pm
மலேசிய நாட்டின் உயரிய மதிப்பாக கருதப்படும் ‘டத்தோ’ பட்டம் நடிகர் ராதாரவிக்கு வழங்கப்படவே இல்லை என்று திரைப்பட பாடகி சின்மயி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
Samayam Tamil maxresdefault (1)
ராதாரவிக்கு ‘டத்தோ’ விருது வழங்கப்படவில்லை: சின்மயி பதிவு


தமிழ் திரையுலகில் ‘மீ டூ’ புகாரை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அதை தொடர்ந்து டப்பிங் கலைஞர்கள் யுனியனிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து, இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கும் விதமாக சின்மயி பேசி வருகிறார். இப்போது ராதாரவி - சின்மயி விவகாரம் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.

அந்த நிலையில்தான், ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்கிற 'டத்தோ' பட்டம் பொய் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் சின்மயி. இது குறித்து சின்மயி மலேசிய நாட்டின் மெலேகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


ஆங்கிலத்தில் சின்மயி பதிவிட்ட கடிதத்திற்கு தமிழ் மொழியாக்கம் இதுதான்:

மதிப்பிற்குரிய சின்மயி ஸ்ரீபதா,

நான் ஏற்கெனவே, மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனெனில் ராதாரவி இந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். மெலாகா அரசின் முதல்வர் யாக் தவுன் ஹாஜி அடி பின்னிடம் இது குறித்து புகார் தெரிவித்து இதன் மீது நடவடிக்கையோ அல்லது தீர்வோ எட்டப்படும். இதைப் பற்றி எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.

பிரசாந்த் குமார் பிரகாசம்
மெலாகா முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலர்.



இதை அம்பலப்படுத்தி மீண்டும் ராதாரவியை வம்புக்கிழுத்திருக்கிறார் சின்மயி. மலேசியாவில் வழங்கப்படும் 'டத்தோ' பட்டம் கவுரவமிக்கதாக கருதப்படுகிறது. முன்னதாக இந்திய அளவில் நடிகர்களில் ஷாருக் கானுக்கு இந்தப் ப‌ட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்