ஆப்நகரம்

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்: சபாஷ் கண்ணானு பாராட்டிய ரஜினி

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தை பெற்ற சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Aug 2020, 11:21 am
நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். அப்பா நடிகராக இருந்தாலும் ஸ்ருதன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். மகனுக்கு நடிப்பை விட படிப்பில் தான் ஆர்வம் அதிகம் இருப்பதை புரிந்து கொண்ட சின்னி ஜெயந்த் அவரை ஊக்குவித்தார்.
Samayam Tamil rajinikanth


மகனுக்கு எது பிடிக்கிறதோ அதையே செய்யட்டும் என்று சின்னி ஜெயந்த் விட்டுவிட்டார். இந்நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தான் பயிற்சி எடுத்துள்ளார் ஸ்ருதன்.

தன் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சின்னி ஜெயந்த். இதை அவர் ரஜினிகாந்துக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ஸ்ருதன் ஜெய் ஐஏஎஸ் அதிகாரியாகப் போவது குறித்து அறிந்த ரஜினி அவரை பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் தீர்ந்த பிறகு தன் மகனுடன் சென்று ரஜினியை பார்க்கவிருப்பதாக சின்னி ஜெயந்த் தெரிவித்துள்ளார். தன் மகன் செய்த சாதனை குறித்து சின்னி ஜெயந்த் அனைவரிடமும் பெருமையாக பேசி வருகிறார்.

நம்பிக்கையும், விடா முயற்சியும், பொறுமையும் தான் தனக்கு கை கொடுத்ததாக ஸ்ருதன் கூறியுள்ளார்.

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை படம் மூலம் நடிகர் ஆனவர் சின்னி ஜெயந்த். கடந்த 1984ம் ஆண்டு வெளியான கை கொடுக்கும் கை படத்தில் சின்னி ஜெயந்த் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு நகைச்சுவை நடிகராக ஒரு ரவுண்டு வந்தார் சின்னி ஜெயந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுனுக்கு முன்பு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்த பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இது மட்டும் நடந்தால், சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் லோகேஷ் தெலுங்கு படத்தை இயக்கவிருக்கிறார், சூர்யாவை வைத்து படம் பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்