ஐதராபாத்: சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி, திரையரங்குகளில் வெளியான கைதி நம்பர் 150 படக்குழுவினருக்கு இயக்குநர் ராஜமௌலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி மீண்டும் திரைக்கு திரும்பியுள்ளார். அவர் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதனால் திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில் ’கைதி நம்பர் 150’ படத்தின் மூலம், தற்போது மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் கத்தி. அப்படத்தின் ரீமேக் தான் ‘கைதி நம்பர் 150’.
இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், புதிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல இயக்குநர் ராஜமௌலி, கைதி நம்பர் 150 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக சிரஞ்சீவியை திரையில் காணாமல் தவித்ததாகவும், மீண்டும் திரைக்கு திரும்பியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Producer..Vinay garu..kummesaaranthe..None could have handled this project better than you. Team KN150...Have a blast...👍👍— rajamouli ss (@ssrajamouli) January 11, 2017 தெலுங்கு திரைப்பட உலகில் பாகுபலி திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனையையும், ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் கைதி நம்பர் 150 படம், அச்சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chiranjeevi garu thanks for coming back and missed you for 10 years says rajamouli.
தென்னிந்தியாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி மீண்டும் திரைக்கு திரும்பியுள்ளார். அவர் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதனால் திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில் ’கைதி நம்பர் 150’ படத்தின் மூலம், தற்போது மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் கத்தி. அப்படத்தின் ரீமேக் தான் ‘கைதி நம்பர் 150’.
இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், புதிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல இயக்குநர் ராஜமௌலி, கைதி நம்பர் 150 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக சிரஞ்சீவியை திரையில் காணாமல் தவித்ததாகவும், மீண்டும் திரைக்கு திரும்பியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Producer..Vinay garu..kummesaaranthe..None could have handled this project better than you. Team KN150...Have a blast...👍👍— rajamouli ss (@ssrajamouli) January 11, 2017 தெலுங்கு திரைப்பட உலகில் பாகுபலி திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனையையும், ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் கைதி நம்பர் 150 படம், அச்சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chiranjeevi garu thanks for coming back and missed you for 10 years says rajamouli.