ஆப்நகரம்

மெகா குடும்பத்துக்கு நடிகைக்கு ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நகையை பரிசளித்த சிரஞ்சீவி

நிஹாரிகாவுக்கு அவரின் பெரியப்பா சிரஞ்சீவி ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நகையை பரிசாக அளித்துள்ளாராம்.

Samayam Tamil 9 Dec 2020, 8:14 pm
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகளும், நடிகையுமான நிஹாரிகா கொனிடெலாவுக்கும், குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் உதய்நிவாஸ் மாளிகையில் இன்று திருமணம் நடைபெற்றது.
Samayam Tamil niharika


திருமணத்திற்காக நிஹாரிகா தன் பெற்றோர், அண்ணன், வருங்கால கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் தனி விமானம் மூலம் உதய்பூர் சென்றார். சிரஞ்சீவி தன் குடும்பத்தாருடனும், அல்லு அர்ஜுன் தன் குடும்பத்துடனும் தனித்தனி விமானங்களில் உதய்பூருக்கு சென்றார்கள்.

அரண்மனையில் திருமணம்: தனி விமானத்தில் உதய்பூர் பறந்த பெரிய இடத்து நடிகை

சித்தப்பா பவன் கல்யாணும் தற்போது உதய்பூரில் தான் இருக்கிறார். சங்கீத் நிகழ்ச்சியின்போது நிஹாரிகா தன் அண்ணனும், நடிகருமான ராம் சரணுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.

உதய்பூரில் மெகா குடும்பத்து ஸ்டார்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், நாகேந்திர பாபுவின் குடும்பத்தாரை இப்படி ஒன்றாக பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

உதய்பூருக்கு கிளம்புவதற்கு முன்பு ஹைதராபாத்தில் நாகேந்திர பாபுவின் வீட்டில் சில சடங்குகள் நடந்தது. அப்பொழுது நிஹாரிகாவுக்கு சிரஞ்சீவி ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நகையை பரிசாக அளித்துள்ளார். நிஹாரிகாவுக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட நகையாம்.

நிஹாரிகா சிறு வயதில் இருந்தே சிரஞ்சீவியின் செல்லம். அவரை பெரியப்பா என்று இல்லை மாறாக அப்பா என்று தான் அழைப்பார். நிஹாரிகா சிறுமியாக இருந்தபோது சிரஞ்சீவி அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த நிஹாரிகா திருமணத்திற்கு பிறகு தயாரிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்