ஆப்நகரம்

என் கணவரின் ஆசை நிறைவேறாமலேயே போயிட்டார்: நடிகை மேக்னா உருக்கம்

பிள்ளை பிறந்ததும் லயன் கிங் படத்தில் சிம்பாவை அறிமுகம் செய்து வைத்தது போன்று போஸ் கொடுக்க சிரஞ்சீவி சார்ஜா விரும்பியதாக மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Dec 2020, 6:40 pm
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்பொழுது கர்ப்பமாக இருந்த அவரின் காதல் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
Samayam Tamil chiranjeevi sarja


சிரஞ்சிவி விரும்பிய மருத்துவமனையில் தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடன் அதை சிரஞ்சீவியின் புகைப்படத்திற்கு அருகில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி கன்னட சினிமா ரசிகர்களை கண் கலங்க வைத்தது.

மருத்துவமனை வாசலில் கூடிய ரசிகர்கள் குட்டி சிரு பிறந்ததை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். சிரஞ்சீவியன் குழந்தைக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளித் தொட்டிலை வாங்கி பரிசளித்தார் சித்தப்பா த்ருவா சார்ஜா.

இந்நிலையில் தனக்கு பிள்ளை பிறந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சிரஞ்சீவி விரும்பினார் என மேக்னா தெரிவித்துள்ளார். இது குறித்து மேக்னா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

லயன் கிங் படம் பார்த்தபோது ரொம்ப அழுதேன். நான் கர்ப்பமாக இருந்தபோது பரிசோதனைக்காக சென்ற மருத்துவமனையில் இருக்கும் பால்கனி ஒன்றை அடையாளம் கண்டு வைத்தார் சிரு. நமக்கு குழந்தை பிறக்கும்போது அதை லயன் கிங் பட பாணியில் என் கையில் ஏந்தி அந்த பால்கனியில் நின்று தான் ரசிகர்களிடம் அறிவிப்பேன் என்று சிரு அடிக்கடி கூறி வந்தார். ஆனால் அவரின் ஆசை நிறைவேறவே இல்லை என்றார்.

நவம்பர் 12ம் தேதி குழந்தையை தொட்டிலில் போடும் விழா நடந்தது. அதில் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். குழந்தைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் பெயர் வைக்கப் போகிறார்கள். பெயர் சூட்டும் விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இறந்து போன என் அண்ணனே குழந்தையாக பிறந்துட்டார்: தம்பி நடிகர்

கடந்த ஏப்ரல் மாதம் பேசிக் கொண்டிருந்த போது தனக்கு மகன் தான் பிறப்பான் என சிரஞ்சீவி கூறியதாக அவரின் தம்பி த்ருவா தெரிவித்தார். தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான் என்பதில் சிரு உறுதியாக இருந்ததாக மேக்னாவும் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்