ஆப்நகரம்

மகனுக்காக இயக்குனரிடம் கதை கேட்ட மெகா ஸ்டார்!

தன் மகன் ராம்சரணுக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி இயக்குனரிடம் கதை கேட்டு வருகிறார்.

TNN 28 Jan 2017, 5:37 pm
தன் மகன் ராம்சரணுக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி இயக்குனரிடம் கதை கேட்டு வருகிறார்.
Samayam Tamil chiranjeevi story listening for son ravi teja
மகனுக்காக இயக்குனரிடம் கதை கேட்ட மெகா ஸ்டார்!


தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரண். மகன் ராம் சரணுக்காக அப்பா சிரஞ்சீவி இயக்குனர்களிடம் நல்ல கதைகளை கேட்டு வருகிறார். ராம் சரணையும் மெகா ஸ்டார் அளவிற்கு உயர்த்த முயற்சி செய்து வருகிறார் சிரஞ்சீவி. இடையில் பல தோல்வியை கொடுத்த ராம் சரணிடம் சிரஞ்சீவி பிறமொழி வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்கில் நடிக்குமாறு கூறினாராம். அவரின் ஆலோசனைபடி ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கில் நடித்தார் ராம் சரண். படம் வெற்றி பெற்றது.

அதையடுத்து சிரஞ்சீவி ராம் சரணுக்காக ஒரு பட்ஜெட் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்துள்ளார். பிரபல இயக்குனர் கிரீஷை, சந்தித்து தன் மகனுக்காக கதை கேட்டிருக்கிறார் சிரஞ்சீவி. கிரீஷ், ராம் சரணுக்காக ‘ராயபரி’ படத்தின் கதையை சிரஞ்சீவியிடம் கூறியிருக்கிறார். அக்கதையைக் கேட்ட உடனே ஒகே சொல்லிவிட்டார் சிரஞ்சீவி. ராம் சரண், இயக்குனர் சுகுமார் படத்தை முடித்தவுடன், க்ரிஷ் இயக்கும் ‘ராயபரி’ படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்