ஆப்நகரம்

வருங்கால மனைவியிடம் எக்குத்தப்பா சிக்கிய பிரபல நடிகர்

அந்த சம்பவத்திற்கு பிறகு சுரேகா என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று நினைத்தேன் என சிரஞ்சீவி சமந்தா நடத்தும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Dec 2020, 2:28 pm
சமந்தா சாம்ஜாம் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கை, சினிமா பற்றி பேசி வருகிறார்கள்.
Samayam Tamil chiranjeevi


அந்த நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது,

பிரபலங்களுக்காக சங்கராபரணம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. எனக்கு மஞ்சு பார்கவியை தெரியும் என்பதால் அவர் என்னை அழைத்திருந்தார். நானும் படம் பார்க்க சென்றிருந்தேன். கிளைமாக்ஸ் காட்சி வந்தபோது நான் அழுது கொண்டிருந்தேன். கண்ணீரை எப்படி துடைப்பது என்று கூட தெரியாமல் அழுதேன்.

நான் அழுவதை பார்த்த மஞ்சு பார்கவி தன் துப்பட்டாவை கொடுத்தார். அவரின் துப்பட்டாவை வைத்து நான் கண்ணீரை துடைத்தபோது ஹாலில் லைட்டை சுவிட்ச் ஆன் செய்துவிட்டார்கள். அந்த ஹாலில் அல்லு ராமலிங்கையா காருவும், என் வருங்கால மனைவியான சுரேகாவும் இருந்தார்கள்.

நான் மஞ்சு பார்கவியின் துப்பட்டாவை வைத்து கண்ணீரை துடைத்ததை பார்த்து அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து அல்லு காரு தன் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். சுரேகா என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னை மணந்தார் என்று கூறி சிரித்தார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி மேலும் கூறியதாவது,

என் சுயசரிதையை எழுத விரும்புகிறேன். அந்த ஆசை மட்டும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது என்றார்.

தனக்கு மீண்டும் அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லை என்று கூறினார் சிரஞ்சீவி. கெரியரை பொறுத்த வரை கொரடலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இது தவிர்த்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். மேலும் மோகன் ராஜா இயக்கத்தில் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் சிரஞ்சீவி.

ரஜினிக்கு பி.பி. எகிற இது தான் காரணமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்