தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் விக்ரம். சீயான் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் விக்ரம் பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக ஒரு வெற்றி படத்திற்காக போராடி வருகின்றார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மகான் கோப்ரா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தற்போது வெளியாகவிருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பியுள்ளார் விக்ரம்.
இந்நிலையில் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார். அவருடன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ,ஜெயம் ரவி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் தனது ஆசையை கூறியுள்ளார்.
அதாவது அவர் ஐஸ்வர்யா ராயின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் அப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் இருவரும் ஜோடியாக நடிக்காதது குறிப்பிடத்தக்கது.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மகான் கோப்ரா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தற்போது வெளியாகவிருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பியுள்ளார் விக்ரம்.
இந்நிலையில் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார். அவருடன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ,ஜெயம் ரவி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் தனது ஆசையை கூறியுள்ளார்.
அதாவது அவர் ஐஸ்வர்யா ராயின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் அப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் இருவரும் ஜோடியாக நடிக்காதது குறிப்பிடத்தக்கது.