ஆப்நகரம்

கோப்ரா படத்தில் சீயான் விக்ரமின் புதிய கெட்டப்: போட்டோ வைரல்

விக்ரம் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் கோப்ரா புகைப்படம் தற்போது வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 24 Jul 2020, 4:50 pm
விக்ரம் அடுத்து நடித்து வரும் கோப்ரா படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 20 விதமான கெட்டப்களில் நடிக்க உள்ளார் என்பது தான். பல மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருந்தார் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Samayam Tamil Vikram in Cobra


ரஷ்யாவில் படத்தின் ஷுட்டிங் நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

டிமான்டி காலனி இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். மீண்டும் படப்பிடிப்பு துவங்க அரசு எப்போது அனுமதி அளிக்கும் என படக்குழு காத்திருக்கும் நிலையில் தற்போது விக்ரம் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் அந்த புகைப்படம் இதோ..


இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த தோற்றம் தற்போதைய காலகட்டத்தில் இருப்பதுபோல இல்லாமல் சில தலைமுறைகள் முன்பு இருந்த ஸ்டைலில் இருப்பதால், விக்ரமின் இந்த தோற்றம் பிளாஷ்பேக் காட்சிகளில் வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படக்குழு இது பற்றி எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

7 ஸ்கிறீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் கோப்ரா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தும்பி துள்ளல் என்ற பாடல் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தில் வரும் ஒரு திருமண காட்சிக்காக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் மூலமாக விக்ரம் மற்றும் ஏ ஆர் ரகுமான் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ராவணன் மற்றும் ஐ ஆகிய படங்களுக்காக ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு கேஜிஎஃப் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் இந்தியா முழுவதும் மிகப் பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கோப்ராவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். அவருக்கு படத்தில் நெகட்டிவ் வேடம் என்றும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சியான் விக்ரம் கோப்ரா படம் தவிர்த்து தன் கைவசம் மேலும் மூன்று படங்கள் வைத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா என்ற வரலாற்றுப் படம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது அறுபதாவது படம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

சென்ற வருடம் துவங்கிய கோப்ரா படத்தின் ஷூட்டிங்கை இந்த வருட முடித்து படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பரவல் சினிமா துறையை முற்றிலும் முடங்கி விட்டது. அதனால் இந்த வருடம் படம் ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அளித்து வந்தாலும் சினிமா ஷூட்டிங் தொடங்க இன்னும் அனுமதி அளிக்காமல் இருக்கிறது. காரணம் ஷுட்டிங் நடத்த மிக அதிக அளவில் ஆட்கள் ஒரு இடத்தில் கூட வேண்டியிருக்கும் என்பதால் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகத்தான் ஷூட்டிங் நடத்த அரசு இன்னும் அனுமதி அளிக்காமல் உள்ளது.

மேலும் சினிமா துறை முடங்கியதால் தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தன் சம்பளத்தில் இருந்து 40% குறைத்துக் கொள்வதாக கூறியிருக்கிறாராம். இந்த தகவல் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்