ஆப்நகரம்

சினிமாவை விட உரிமையே முக்கியம்! போராட வாருங்கள் - தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு!

வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள கண்டன அறவழி போராட்டத்தில் கலந்து கொள்ள சினிமா துறையைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Samayam Tamil 5 Apr 2018, 2:45 pm
வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள கண்டன அறவழி போராட்டத்தில் கலந்து கொள்ள சினிமா துறையைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
Samayam Tamil TN-CInema


தமிழ் சினிமா திரையரங்க ஒளிரப்பு சம்பந்தமாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு மாத காலத்தில் எந்த புதுப்படம் ரிலீஸாகவில்லை. மேலும் புதிய படத்துக்கான படப்பிடிப்புகளும் துவங்கப்படவுள்ளன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த கண்டன அற வழி போராட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்