ஆப்நகரம்

இளைஞர்களின் போராட்டத்தில் சினிமாக்காரர்கள் தலையிடக் கூடாது: கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் சினிமாக்காரர்கள் தலையிடக் கூடாது என்று உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

TNN 20 Jan 2017, 4:01 pm
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் சினிமாக்காரர்கள் தலையிடக் கூடாது என்று உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cinema artists should avoid interfering in the youth protest
இளைஞர்களின் போராட்டத்தில் சினிமாக்காரர்கள் தலையிடக் கூடாது: கமல்ஹாசன்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் முன்னெணுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று மௌனப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இப்போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இளைஞர்கள் தன்னெழுச்சியாக அறவழிப்போராட்டம் நடத்துக்கிறார்கள் என்றும் அவர்களது போராட்டத்தில் சினிமாக்காரர்கள் தலையிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் தான் இளைஞர்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்த வைத்துவந்துள்ளனர் இப்போது, இளைஞர்கள் தானாகவே அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் சினிமாக்காரர்கள் தங்கள் புகழ் வெளிச்சத்தை திணிக்காமல் இருப்பது நல்லது. இப்போதைய இளைஞர்களும் இளம்பெண்களும் அறிவாளிகள். அவர்களது போராட்டத்தைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்