ஆப்நகரம்

தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்!

‘காஞ்சனா 3’ இந்தி படப்பிடிப்பில் இருந்து வரும் இயக்குனர் ராகவா லாரன்ஸ், தன்னுடைய ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Apr 2019, 4:35 pm
என்னுடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னைப்பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலைப் படாதீர்கள்.
Samayam Tamil raghavalawrence


என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்.

நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்.நல்லதையே செய்வோம். அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும். எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மும்பையில் காஞ்சனா இந்திப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.அது வரை அமைதி காப்போம். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்