ஆப்நகரம்

நீலகிரியில் சினிமா படப்பிடிப்புகள் குறைவு: பிரபல இயக்குனர் ஜாய் மேத்யூ புகார்!

நீலகிரியில் இடைத்தரகர்களின் தலையீட்டால் சினிமா படப்பிடிப்புகள் மிகவும் குறைந்துள்ளன என பிரபல இயக்குனர் ஜாய் மேத்யூ தமிழக அரசிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Dec 2018, 1:55 pm
தற்போது ஊட்டியில் தெற்காசிய அளவிலான குறும்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் சிறந்த 90 குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. விழாவில் கலந்து கொண்ட கேரளாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “நீலகிரி மாவட்டம் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாகும். அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஊட்டியில்தான் அதிகமான படப்பிடிப்புகளை நடத்தினார்கள்; தற்போது நடத்தியும் வருகிறார்கள்.
Samayam Tamil joy


பல மலையாள திரைப்படங்களை நான் ஊட்டியில் படமாக்கி உள்ளேன். இப்போது ஊட்டிக்கு தயாரிப்பாளர்கள் வருகை குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வுதான் காரணம், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி பெற பல நபர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு அதிகாரிகளுக்காக அதிக பணத்தை கேட்பது முக்கிய காரணம் ஆகும்.

இந்த விவரங்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் நான் தெரிவித்தேன். தமிழக அரசு நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் வகையில், மாவட்ட கலெக்டர், உயர் வன அதிகாரி மற்றும் நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து படப்பிடிப்புக்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உடனடியாக அனுமதி பெறும் பொருட்டு வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் ஊட்டிக்கு அதிகமான சினிமா தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்