ஆப்நகரம்

மிஷ்கின் படத்திலிருந்து விலகிய பி சி ஸ்ரீராம்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் விலகியுள்ளார்.

Samayam Tamil 11 Sep 2019, 10:31 am
இயக்குநர் மிஷ்கின் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. உலக சினிமா சாயலில், உள்ளூர் ரசிகனும் ரசிக்கும்படி, இருள் அடர்ந்த கதைகள் சொலவதில் வல்லவர் அவர். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு லைகா நிறுவனமும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 'சைகோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் உதயநிதி நயாகனாகவும் அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள்.
Samayam Tamil 70585614_390877094943731_2935414901897691136_n (3)


இப்படத்திற்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதாக கூறப்பட்டது. மிஷ்கின் படங்களில் கேமாரா கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். கால்களை மட்டுமே காட்டி கதை சொல்வார். இருளில் வித்தியாச கோணங்களில் நிறங்களை பயன்படுத்துவார. அவர் திரைக்கதை எழுதும்போதே கேமரா கோணங்களை எழுதி விடுவார்.
பி சி ஸ்ரீராம் இந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளராக போற்றப்படுபவர். அவரரின் ஒளிப்பதிவு கோணங்கள் படத்தின் கதைக்கு வலுக்கூட்டும்படி அமையும் ஷீட்டிங்க் ஸ்பாட்டில் தான் அவர் கேமரா கோணங்களை தீர்மானிப்பார் என இயக்குநர் மணிரத்னம் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இப்படி இருவேறு துருவஙகள் இணையும் போது, படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சைகோ படத்திற்கு தன் உடல் நிலை காரணமாக தான் ஒளிப்பதிவு செய்யவில்லை என்றும், தனது உதவியாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் பி சி ஸ்ரீராம் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைகோ ஷீட்டிங்க் ஸ்பாட்


இது பற்றி தன் வலைத்தள பக்கத்தில் பி சி ஸ்ரீராம் கூறியதாவது...
"வாழ்த்துக்கள் தன்வீர் படம் ஒளிப்பதிவு மற்றும் நிறமேம்பாட்டு (DI )வேலைகள் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். தேவையின் போது மிஷ்கின் உனக்கு வழிகாட்டியிருப்பார். எனது உடல் நிலை காரணமாக இப்படத்தில் என்னால் பணியாற்ற முடியாததை, அவர் புரிந்துகொண்டிருப்பார். 99 சதவீத வேலையை நீயே செய்ததால், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தகுதி உன்னையே சேரும். மிஷ்கின், உதய நிதி ஸ்டாலின் மற்றும் மொத்தப் படக்குழுவும் உன்னுடன் இணைந்து சிறப்பான வேலையை தந்திருப்பார்கள் என நம்புகிறேன். உண்மை வெல்லும். காஷிமீர் உன்னால் பெருமை கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.



இதன் மூலம் அவரது உதவியாளராக பல படங்களில் பணிபுரிந்த தன்வீர் 'சைகோ' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் ரசிகர்கள் சிலர் மிஷ்கினுக்கும் பி சி ஸ்ரீராமுக்கும் ஒத்துவராத காரணத்தால் தான் அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார் எனவும், உண்மை வெல்லும் என்று அதனையொட்டியே அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

இப்படத்தில் முதலில் சாந்தனு நடிப்பதாக இருந்தது. உதயநிதி இப்படத்தில் ஆர்வம் காட்டவே, அவரை விலக்கிவிட்டு உதயநிதியுடன் இப்படத்தை மிஷ்கின் தொடங்கினார் எனபது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்