ஆப்நகரம்

நாய் பொழப்பு: தயாரிப்பாளர்களை கிண்டலடித்து சந்தோஷ் சிவன் டுவீட்

திரை உலகின் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. ஆனால் இப்போது பதிவிட்டுள்ள டுவிட்டில் சம்பளம் தரக்கூடிய தயாரிப்பாளர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என கிண்டலடித்துள்ளார்.

Samayam Tamil 14 Sep 2018, 4:18 pm
திரை உலகின் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. ஆனால் இப்போது பதிவிட்டுள்ள டுவிட்டில் சம்பளம் தரக்கூடிய தயாரிப்பாளர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என கிண்டலடித்துள்ளார்.
Samayam Tamil santhos-sivan


நாய் பொழப்பு:
தயாரிப்பாளர்கள் தங்களின் பட நடிகைகளுக்கு சம்பளம் தரும் போது மிக சந்தோஷத்துடன், மன நிறைவுடன் கொடுப்பது போன்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது இவங்களுக்கு இவ்வளவு கொடுக்கனுமா?, பிரயோஜனம் இருக்கா என்ற மாதிரி மூகத்தை மாற்றிக் கொண்டு கொடுப்பது போல் ஒரு நாயின் புகைப்பட முக மாற்றத்தை பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் பலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன். அந்த டுவிட் யாரையும் புண் படுத்தும் நோக்கில் போடவில்லை என தற்போது டுவிட் செய்துள்ளார்.



சிக்கிய செக்கச் சிவந்த வானம்:
சந்தோஷ் சிவன் தற்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகின்றார்.

இந்த படம் குறித்து தான் சந்தோஷ் சிவன் குறிப்பிட்டுள்ளாரோ என சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்