ஆப்நகரம்

முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியை, எம்ஜிஆரோடு ஒப்பிட்டுப் பேசிய நடிகை சரோஜாதேவி!

நடிகை சரோஜா தேவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆரோடு ஒப்பிட்டு, ‘எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் முதலமைச்சர்’ என்று பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 19 Dec 2018, 3:45 pm
இது மார்கழி மாதம் என்பதால் ஆங்காங்கே ஆன்மிக நிகழ்ச்சியில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த திருவையாறு நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவியும் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் கலந்து கொண்டார்.
Samayam Tamil sarojadevi


விழாவில் பேசிய நடிகை சரோஜா தேவி எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து ‘‘இவரே எப்போதும் இவரே முதலமைச்சராக இருக்க வேண்டும். என்னுடைய காலகட்டத்தில் எத்தனையோ முதல்வர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி முகத்தில் எப்போதும் புன்னகை காணப்படுகிறது. எம்ஜிஆர் போன்று அவரும் சிரித்து பழகுகிறார்” என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்