ஆப்நகரம்

2.0 Movie: டிக்கெட்டும் எடுத்து கொடுத்து படம் பாக்க லீவும் விட்ட நிறுவனம்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 28 Nov 2018, 8:36 pm
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Samayam Tamil akshay


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படம் ரஜினிகாந்தின் 68ஆவது பிறந்தநாளை (12.12.1950) முன்னிட்டு வெளியாகாமல், நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்களின் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு லீவு போட்டு சென்று முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது வழக்கம். ஆனால், இன்றைய காலத்தில் அதற்கு எதிர்மறையாக, நிறுவனமே படத்திற்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து விடுமுறையும் அறிவிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், கோயம்புத்தூர் சித்தாபுதூரில் உள்ள பிரபலமான நிறுவனமான கெட் செட் கோ என்ற நிறுவனம், ஊழியர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து, நாளை விடுமுறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்