ஆப்நகரம்

பாலிவுட்டில் படமாகும் கோவை சம்பவம்!!

கோவையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளனர்.

TOI Contributor 25 Apr 2017, 5:00 pm
கோவையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளனர்.
Samayam Tamil coimbatore incident turning into as bollywood film
பாலிவுட்டில் படமாகும் கோவை சம்பவம்!!


கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தம். இவர் ஏழை மக்களுக்காக குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் மிஷினை வடிவமைத்தவர். இவர் இந்த மிஷினை கண்டுபிடித்து, குறைந்த விலையில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு நாப்கினை விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் கிராமப்புறங்களில் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது. இதனால், கடந்த வருடம் மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கி கவுரவப்படுத்தியது.

இந்தக் கதையை, இந்தியில் படமாக எடுக்கிறார் இயக்குநர் பால்கி. ஹீரோவாக அக்ஷய் குமாரும், ஹீரோயினாக ராதிகா ஆப்தேவும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்காக முருகானந்தத்திடம் பேசி, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதையும் தெரிந்து கொண்டு கதை எழுதியுள்ளார் பால்கி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்