ஆப்நகரம்

யோகிபாபுவால 3 மாசம் சும்மா இருந்த ஜெயம் ரவி

யோகி பாபு மிகவும் பிஸியாக இருந்ததால் 3 மாதங்கள் காத்திருந்துதான் படத்தை தொடங்கினோம் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Feb 2020, 4:06 pm
தமிழ் சினிமாவின் பிஸியான ஆள் என்றால் இப்போதைய நிலைமையில் யோகி பாபுதான். ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காமல் கமிட் ஆன எல்லா படங்கள்லயும் படுவேகமாக நடித்து கொடுக்கிறார். இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
Samayam Tamil yogi babu commit


ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம், 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த படம்.. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல பெயரையும் பெற்றது. இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கேரக்டரை அவரைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்பதால் 3 மாதங்கள் வரை காத்திருந்து அவரை கமிட் செய்தோம் என கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.


யோகி பாபு இந்த படத்தில் பள்ளி மாணவராக நடிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும், எனினும் அதை சவாலாக ஏற்று நடித்து முடித்தார் எனவும் ஜெயம் ரவி தெரிவித்தார். கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படமாகும்.

புதுமாப்பிள்ளை யோகிபாபுவுக்கு தனுஷ் கொடுத்த அசத்தல் பரிசு

தற்போது ஜெயம் ரவி தனது 25 வது படத்தில் நடித்து வருகிறார். 'போகன்' இயக்குநர் லக்ஷமணன் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்