சர்கார் படத்தைத் தொடர்ந்து அடுத்து, கில்லி மற்றும் துப்பாக்கி படங்களைப் போன்று பக்கா மாஸ் படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் ஒரு பக்கா மாஸ் படத்தில் நடிக்கயிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அர்ச்சனா கல்பாதி கூறுகையில், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அது கில்லி மற்றும் துப்பாக்கி படங்களைப் போன்று மாஸ் படமாக இருக்கும். விஜய்யின் படத்தை தயாரிப்பது எங்களது கனவாக இருக்கிறது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைத்து எங்களது கனவு நிறைவேறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்குமா? தயாரிக்காதா? என்பது குறித்து இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. விஜய் படத்தை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய போட்டிகள் மட்டும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் ஒரு பக்கா மாஸ் படத்தில் நடிக்கயிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அர்ச்சனா கல்பாதி கூறுகையில், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அது கில்லி மற்றும் துப்பாக்கி படங்களைப் போன்று மாஸ் படமாக இருக்கும். விஜய்யின் படத்தை தயாரிப்பது எங்களது கனவாக இருக்கிறது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைத்து எங்களது கனவு நிறைவேறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்குமா? தயாரிக்காதா? என்பது குறித்து இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. விஜய் படத்தை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய போட்டிகள் மட்டும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.