ஆப்நகரம்

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை: அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்!

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் இருந்து 41 சவரன் நகை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Apr 2019, 9:59 am
காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் இருந்து 41 சவரன் நகை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil immaan annachi


கடந்த 2006ம் ஆண்டு பரத் மற்றும் ஜெனீலியா ஆகியோர் நடிப்பில் வந்த சென்னைக் காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இமான் அண்ணாச்சி. இப்படத்தைத் தொடர்ந்து தலைநகரம், மரியாதை, கோ, வேட்டைக்காரன், மரியான், நையாண்டி, ஜில்லா, கோலி சோடா, கயல், பூஜை, மெட்ராஸ், காக்கி சட்டை, புலி, கதகளி, அஞ்சல, சிங்கம் 3, சாமி 2, நிமிர், டிராபிக் ராமசாமி என்று பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

இவர், சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டீஸ் சுட்டீஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமாகி வருகிறார். இந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில், பீரோவில் இருந்த 41 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், தியாகராயநகரில் உள்ள நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்