ஆப்நகரம்

விஜய் ரசிகர்களின் தொல்லையால் வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறிய கருணாகரன்!

விஜய் ரசிகர்களுக்குப் பயந்து, நடிகர் கருணாகரன், தனது போனையும் சுவிட்ஆப் செய்து விட்டு தற்போது வாட்ஸ் அப்பிலிருந்தும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 Oct 2018, 6:21 pm
நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சை, காமெடி நடிகர் கருணாகரன் கிண்டலடித்து, தொடர்ந்து டுவிட்டரில் அவரைத் தாக்கி டுவிட் செய்துக்கொண்டே இருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் கருணாகரனுக்கு கண்டனமும், தாகாத வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைக் கண்டித்து கருணாகரன் விஜய் ரசிகர்கள் மீது கமிஷனர் அலுவலகத்தில் கூட புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil Karunakaran.


இந்நிலையில் கருணாகரனை சில பத்திரிகையாளர்கள் தொடர்புக்கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், நேற்று இரவிலிருந்து அவருடைய போன் ஆப் செய்து தான் உள்ளதாம், வாட்ஸ் அப்பிலிருந்து கூட வெளியேறிவிட்டாராம்.

ஏனெனில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்து மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசி வருவதால் இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகின்றது

அடுத்த செய்தி

டிரெண்டிங்