ஆப்நகரம்

டகால்டி படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் சந்தானம்?

அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் டகால்டி என்ற படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சந்தானம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 May 2019, 9:52 am
அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் டகால்டி என்ற படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சந்தானம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil yogi babu


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கும் போது, இவருக்கு அளவுக்கு அதிகமான சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஹீரோவாக வலம் வந்த பிறகு சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது. எனினும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ஏ1 (A1), சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது காமெடியில் உச்சத்தில் இருக்கும் யோகி பாபு, சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபுவு தர்ம பிரபு, கூர்கா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்த இரு படங்களும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்திற்கு டகால்டி என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்